அமெரிக்காவில் 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் ; வெளியான எச்சரிக்கை
காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே காலநிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை ஐ.நா.சபை வலியுறுத்துகிறது.
வெப்ப அலை
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
குறிப்பாக, வட கரோலினாவில் 113 டிகிரி, வாஷிங்டன் டி.சி.யில் 109 டிகிரி என வெயில் கொளுத்துகிறது. இதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் திணறுகின்றனர்.
இதனால் சுமார் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 29-ம் திகதி வரை இந்த வெயில் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.