மலேசியாவில் ஐவருடன் பயணித்த உலங்குவானூர்தி விபத்து !
மலேசியாவில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் சென்ற BO-105 ரக உலங்குவானுர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் பயணைத்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
செவ்வாய்க்கிழமை குச்சிங்கிற்கு வடக்கே சுமார் 929 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாங் லெல்லாங் குறுகிய தூர புறப்பாடு மற்றும் தரையிறங்கும் (STOL) விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM), பிற்பகல் 3.58 மணிக்கு விமானத் தகவல் சேவையிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த அறிவிப்பைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
விமானி உட்பட ஐந்து பேருடன் அந்த உலங்குவானூர்தி, பறக்கும் மருத்துவர் சேவை விமானத்தை இயக்கிக் கொண்டிருந்ததாக CAAM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், CAAM தனது அறிக்கையில் எந்த உயிரிழப்புகளையும் குறிப்பிடவில்லை.
போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), 2016 ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளின் பகுதி XXVI-க்கு இணங்க சம்பவத்தை விசாரிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.