ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! இராணுவ வீரர்கள் பலி
அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்பது இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கென்டக்கியில் ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தபோது இரண்டு அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதிலேயே 9 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (29-03-2023) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த 9 வீரர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
உள்ளூர் நேரம் (இரவு 11 மணி ), போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில், இராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி இரண்டு பிளாக் ஹாக் (HH-60 Black Hawk) மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பிரிக் 101வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் ஜான் லூபாஸ் கூறுகையில், ஒரு ஹெலிகாப்டரில் ஐந்து பேரும், மற்றொன்றில் நான்கு பேரும் இருந்தாக தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆன்-போர்டு கணினிகளில் இருந்து தரவை புலனாய்வாளர்கள் பெற முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.