உயிர்காக்க உதவி கோரல்! தாயின் உருக்கமான வேண்டுகோள்!!
திருகோணமலை தம்பலகாமத்தில் ஏற்கனவே தனது இரண்டு பிள்ளைகளையும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை (Hyper IGM Syndrome) காரணமாக பறிகொடுத்துள்ள தாய் தனது 8 வயது மகனை நோயின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக புலம்பெயர் உறவுகளிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்திரசேகரம் மதிவதனியின் குடும்பம் திருகோணமலை பகுதியில் வசித்து வருகின்றது. இவரது நான்கு பிள்ளைகளில் முதல் இரண்டு பெண் பிள்ளைகளும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக ( Hyper IGM Syndrome) உரிய சிகிற்சை இல்லாமல் உயிரிழந்துவிட்டன.
தற்போது, அவரது எட்டு வயது நிரம்பிய மகனும் இதே நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு இலங்கையில் சிகிற்சை அளிக்கும் வசதி இல்லை என்றும் இதனால் இந்தியாவில் காலதாமதம் செய்யாமல் சத்திர சிகிச்சை செய்யவேண்டுமெனவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிகிற்சைக்கு ஆகக்குறைந்தது ரூபா 50 இலட்சம் தேவையெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிவதனியின் குடும்பம் கூலி வேலைக்கு சென்றே அன்றாடம் உணவுத் தேவையினை பூர்த்தி செய்கின்ற நிலையில் தனது பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு 50 இலட்சம் ரூபாவினை திரட்டுவதற்கு இயலாத நிலையில் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர்.
தனது மகனை காப்பாற்றுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களால் முடிந்தளவு உதவி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை, இரண்டு இலட்சம் ரூபா பணத்தை மட்டுமே மதிவதனியினால் திரட்ட முடிந்துள்ளது.
இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றுவதற்கு உங்களால் முடிந்தளவு நிதி உதவியினை மதிவதினியின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பிவைக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: 00447747178182, 00447747178164

