பிரிட்டிஷ் கொலம்பியாவில் அரை மணி நேரமாக பாதித்த போக்குவரத்து: காரணம் என்ன தெரியுமா?
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஒரு நகரத்தில் அரை மணி நேரமாக போக்குவரத்தை பாதித்தன சுமார் 20 குதிரைகள்.
Osoyoos என்ற நகரத்தின் தெருக்களில் அந்த குதிரைகள் நடைபோட, பின்னால் வந்த வாகனங்கள் முன்னேற இயலாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டுக் குதிரைகளைப் பிடித்து பழக்கும் ஒரு நிறுவனத்தின் லாயத்திலிருந்து இந்த குதிரைகள் தப்பியுள்ளன. சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்துக்கு அந்த குதிரைகள் நடைபோட, சுமார் 30 நிமிடங்களுக்குப் பின் அவை சுற்றி வளைக்கப்பட்டன.
இந்த குதிரைகளை பழக்கும் நிறுவனத்தின் பெயர் Indian Grove Riding Stables. அந்த நிறுவனத்திலுள்ளவர்கள் காட்டுக் குதிரைகளை மட்டும் பிடிப்பதில்லை. அவர்கள் அணிவகுப்புகளில் குதிரை சவாரிகளும் நடத்துவதுண்டு.
சமீபத்தில் இந்த அமைப்பினர், 30 குதிரைகளுடன் Kamloops என்ற இடத்தில் அமைந்துள்ள பூர்வக்குடியின பள்ளியின் அருகே புதைக்கப்பட்டிருந்த குழந்தைகளை கௌரவிப்பதற்காக We Ride for the Children எனும் பெயரில் அணிவகுப்பு ஒன்றை நடத்தினார்கள். தற்போது தப்பியோடிய குதிரைகளில் சில, அன்றைய அணிவகுப்பில் கலந்துகொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.