குடியிருப்புக்கு வெளியே கூடாரத்தில் தங்கி பெருந்தொகை திரட்டிய பிரிட்டன் சிறுவன்
இங்கிலாந்தில் குடியிருப்புக்கு வெளியே கூடாரத்தில் 542 இரவுகள் தங்கி 13 வயது சிறுவன் 10,000 பவுண்டுகள்(10,700 டொலர்) திரட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ருமேனியாவில் உள்ள மீட்பு நாய்களுக்காக நிதி திரட்டும் பொருட்டே ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியை சேர்ந்த 13 வயதேயான ஆஷ்லே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
மீட்பு நாய்களுக்காக மொத்தம் 30,000 பவுண்டுண்டுகள் திரட்டும் நோக்கில் ஆஷ்லே களமிறங்கியுள்ளார். ஒரே ஒரு நாள் மட்டும் குடியிருப்புக்கு வெளியே கூடாரத்தில் தங்க முடிவு செய்த ஆஷ்லே, அது தமக்கு புதிய அனுபவமாக இருக்க, தொடர்ந்து இரவில் தங்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் ஒரு மாதம் கூடாரத்தில் தங்கிய பின்னரே, மீட்பு நாய்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஆஷ்லே இறங்கியுள்ளார். கடும் குளிரில் போராட வேண்டியிருந்தது எனக் கூறும் ஆஷ்லே, சில இரவுகளில் மழையும் குறுக்கிட்டது என்றார்.
இருப்பினும் 30,000 பவுண்டுகள் திரட்டும் வரையில் தமது இந்த முயற்சி தொடரும் என்றார் ஆஷ்லே.