நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம்
விடுமுறை நாட்கள் தொடங்கும் நிலையில் அடுத்த 10 நாட்களில் 200-கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும் என EasyJet நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் பயணிகளையும் மொத்தமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
தற்போது முதல் ஜூன் 6 வரை லண்டனின் கேட்விக் விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 24 விமானங்களை ரத்து செய்வதாக EasyJet விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தாமதமாக இந்த அறிவிப்பை வெளியிடுவதில் வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும் எனவும், கட்டணத்தொகையை திரும்பப் பெற முடிவு செய்பவர்களுக்கு உரிய முறைப்படி அனுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மென்பொருள் செயலிழப்பால் ஈஸிஜெட் விமான சேவை நிர்வாகம் வியாழக்கிழமை மட்டும் சுமார் 200 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் பல வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதுடன் தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
பலர் பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் சிக்கிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.