நல்லூர் கோயில் வீதியில் விடுதி முற்றுகை; இரு பெண்கள் 3 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடபெற்றுள்ளது.
இதன்போது இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர், நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு இருந்த நிலையில், விடுதி உரிமையாளர் மாறுபட்ட தகவல்களை வழங்கியதை அடுத்து அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டதுடன் இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
கைதான , சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.