முழுமையாக தடுப்பூசி போட்டும்... கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரொறன்ரோ தாயாரும் மகனும்
ரொறன்ரோ விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கிக்கொண்டதால் ஒன்ராறியோ பெண்மணிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் Fort Myers நகருக்கு சென்று திரும்பிய Maya Castle மற்றும் அவரது 7 வயது மகன் ஆகியோர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட Maya Castle போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொண்டு வந்துள்ளார். அமெரிக்காவில் தமது பெற்றோரின் குடியிருப்பில் இருந்து அரிதாகவே தாம் வெளியே சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புளோரிடா செல்வதற்கு முன்னர் தாமும் தமது 7 வயது மகனும் கொரோனா சோதனை முன்னெடுத்து, அதில் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பயணம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கனடாவுக்கு திரும்பிய விமானத்தில் தாம் பாதுகாப்பற்ற நிலையையே உணர்ந்ததாக Maya Castle சுட்டிக்காட்டியுள்ளார். மட்டுமின்றி ரொறன்ரோ விமான நிலையத்தில் நெரிசல் காரணமாக 3 மணி நேரம் விமானத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமது மகனுக்கும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட தமக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக Maya Castle தெரிவித்துள்ளார்.
இருவரும் மெதுவாக மீண்டு வருவதாக தெரிவித்துள்ள Maya Castle, ஆனாலும் முழுமையாக மீண்டுவிட்டதாக தற்போது கூற முடியாது என்கிறார்.