சவுதி விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்!
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தென்மேற்கு ஆசிர் மாகாணத்தில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஹவுத்திகள் நடத்தி டிரோன் தாக்குதலில் நான்கு விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜசன் நகரில் உள்ள மன்னர் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை உறுதிப்படுத்தியது.
ஜசனில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.ஆனால், மொத்தம் 10 பேர் காயமடைந்ததாக அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
#Jazan #SaudiArabia #KSA ?? pic.twitter.com/I6u9Gkh9vG
— Aleph א (@no_itsmyturn) October 8, 2021
ஜசன் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
Images of the 2nd #Iran-backed Houthi's UAV, which was intercepted by the #RSADF #Jazan #KSA #SaudiArabia ??
— Aleph א (@no_itsmyturn) October 8, 2021
(Appears to be a Shahab) pic.twitter.com/piUoVsVNcI