பிரித்தானியாவில் முதியவர்களை குறிவைத்து இந்திய இளைஞன் செய்த மோசடி செயல்!
பிரித்தானியாவில் வசிக்கும் 28 வயதான கிஷன் பட் என்ற இந்திய இளைஞர் ஒருவர் தன்னை பொலிஸ் அல்லது வங்கி அதிகாரி என கூறி முதியவர்களை ஏமாற்றி பல கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார்.
இதன்படி, கிஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர் பிரித்தானியாவில் பலரிடம் பொலிஸ் அல்லது வங்கி அதிகாரி போல தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார்.
குறிப்பாக முதியவர்களை தனது சதி வலையில் வீழ்த்தி வந்தார்.
அப்போது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் தனது வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளார்.
அந்த வகையில் சுமார் ரூ.2¾ கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள ஸ்னாரெஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் கிஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.