மாயமான பெண் தொடர்பில் புகைப்படத்துடன் முக்கிய தகவலை வெளியிட்ட பொலிஸ்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் மாயமான வழக்கை விசாரித்து வந்த பொலிசார், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹொப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையிலேயே பொலிசார் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
மார்ச் 29 அன்று கண்டெடுக்கப்பட்ட சடலமானது, மாயமானதாக தேடப்பட்டு வந்த Trina Hunt என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Port Moody பகுதியை சேர்ந்த 48 வயதான குறித்த பெண் ஜனவரி 18 முதல் மாயமானதாக தேடப்பட்டு வந்துள்ளார். தற்போது அவரது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Port Moody காவல்துறையுடன் இந்த விவகாரம் தொடர்பில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மாயமானதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கானது, இனி கொலை வழக்காக விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.