25 முறை மனைவியைக் காதலியோடு சேர்ந்து கத்தியால் குத்திய கணவர்...வெளியான அதிர்ச்சி சம்பவம்
மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி கணவருக்கும் அவரது காதலிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த Bhupinderpal Gill (40) என்பவர் திருமணத்திற்கு பிறகும் தனது காதலியான Gurpreet Ronald (37)-உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து இவர்களின் காதலுக்கு Bhupinderpal Gill-ன் மனைவி Jagtar Gill தடையாக இருந்ததால் இருவரும் சேர்ந்து Jagtar Gill-ஐ கொலை செய்ததாக தகவல் வெளியானது.
இதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக இருந்த நிலையில் இருவரும் சேர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில் Ugo Garneau என்னும் காவல்துறை அதிகாரி கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு ரத்தத் துளிகள் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையில் வீட்டில் சிந்திக்கிடந்த ரத்தத் துளிகள் Jagtar-க்கு உரியது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கொலை நடந்த அன்று Bhupinderpal Gill திட்டம் போட்டு தனது குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்றதும், அதன்பிறகு Jagtar-ஐ Gurpreet Ronald 25 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனவே நீதிமன்றம் Gurpreet Ronald மற்றும் Bhupinderpal Gill-க்கு ஆயுள் தண்டனை விதிக்க உள்ளதாகவும், அவர்கள் ஜாமீனில் 25 ஆண்டுகள் வெளியில் வர இயலாது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்த வழக்கிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.