கணவன் விட்டுச்சென்ற ஆத்திரம்... லொட்டரியில் ஜாக்பாட் பரிசை அள்ளிய பெண்
தமது நெருங்கிய தோழியுடன் கணவன் தம்மை கைவிட்டு சென்ற ஆத்திரத்தில் லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பரிசாக கிடைத்துள்ளது.
கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த அந்த பெயர் குறிப்பிடாத பெண், இக்கட்டான சூழலில் தாம் தங்கியிருக்கும் வீட்டையும் இழக்க நேர்ந்த நிலையிலேயே இரண்டு லொட்டரி டிக்கெட்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகள் வென்றுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொஞ்சுவது போல் வாழ்த்தியதாகவும், ஆனால், முன்னாள் கணவனின் வாழ்த்துகளுக்கு மட்டும் நன்றி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில், தற்போது அவரது மகள் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது. கல்வி கட்டணங்களை செலுத்த முடியாத சூழலில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி 17ம் திகதி டிக்கெட் வாங்கிய அந்த நாள், தற்செயலாக தமது கணவர் கைவிட்டு சென்றதன் ஓராண்டு நிறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது உற்ற தோழியுடன் தனது கணவர் பிரிந்து சென்ற பின்னர், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சராசரியாக மாதம் 800 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மக்கள் வசிக்கும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குறித்த பெண்ணுக்கு கிடைத்த பரிசுத் தொகையானது மிகப்பெரிய ஜாக்பாட் என கூறப்படுகிறது.