கனடாவின் மன்னன் நான் தான் ; அழுத்தமாக கூறிய சார்லஸ்!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டிவரும் நிலையில், கனடாவின் மன்னர் தான்தான் என மன்னர் சார்ள்ஸ் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டிவரும் நிலையில், மன்னர் சார்ள்ஸ் அது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என பல ரும் கவலை தெரிவித்திருந்தார்கள் ஆனால்,
ட்ரம்பின் மிரட்டல் குறித்து சற்றும் கவலைப்படாமல், பதறாமல், தான் அப்படியெல்லாம் சொல்லவேண் டியதில்லை, அது தன் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் நாடு என்பதை அழுத்தம் திருத்தமாக மன்னர் சார்ள்ஸ் வெளிப் படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இத்தாலிக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மன்னர் சார்ள்ஸ், இத்தாலி நாடாளு மன்றத்தில் உரையாற்றும்போது, இத்தாலி பிரித்தானிய உறவு குறித்து பேசியதோடு நிறுத்திவிடாமல், முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விடயம் குறித்தும் பேசினார்.
நாளை Ravennaவுக்குச் செல்லும் நான், பிரித்தானியா மற்றும் கனடாவின் மன்னர் என்னும் முறையில், Ravenna நாஸி ஜேர்மனியிடமிருந்து விடுதலை பெற்றதன் பெரும் பெருமை மிக்க 80 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றார் மன்னர் சார்ள்ஸ்.
Ravennaவை ஜேர்மனியிடமிருந்து விடுவிப்பதில் பிரித்தானிய மற்றும் கனேடிய படைகள் முக்கியப் பங்காற் றின. ட்ரம்பின் மிரட்டல் உருட்டல்களுக் கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருக் காமல், காத்திருந்து, சரியான நேரத்தில், உலகமே பார்க்க, இத்தாலி நாடாளுமன்றத்தில், தான்தான் கனடாவின் மன்னர் என மன்னர் சார்ள்ஸ் பறை சாற்றிவிட்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.