புகைப்படம் வெளியிட்டு அடையாளம் காண கோரிய ரொறன்ரோ பொலிசார்
ரொறன்ரோ பொலிசார் சிறுவன் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சிறுவன் புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் காக்ஸ்வெல் மற்றும் டான்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் தனியாக நடமாடியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சிறுவனை மீட்ட பொலிசார், காக்ஸ்வெல் மற்றும் டான்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சிறுவனின் பெற்றோரை தேடியுள்ளனர்.
ஆனால் அப்பகுதி மக்கள் எவரும் சிறுவனை அடையாளம் காணவில்லை என்றே கூறப்படுகிறது. மீடகப்பட்ட சிறுவன் ஆரோக்கியத்துடனும் காயங்கள் ஏதுமின்றியும் காணப்படுவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் பெற்றோர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் அல்லது சிறுவனின் பெற்றோர் உடனடியாக பொலிசாரை நாட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.