பிரபல கனேடிய அறிவிப்பாளரின் தாயார் காலமானார்
பிரபல கனேடிய அறிப்பாளர் இளையபாரதி(சிவசோதி) அவர்களின் தாயார் இன்று காலமானார்.
யாழ்ப்பாணம் காரைநகரிலிருந்து இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு ஓர் உன்னதமான அறிவிப்பாளரைத்தந்த அன்னை திருமதி.கந்தையா இராசம்மா அவர்கள் 2021 மே 25ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இயற்கை எய்தியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு ஓர் அருமையான அறிவிப்பாளராக கே.சிவசோதி(இளையபாரதி) வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அன்னை.
இலங்கை வானொலியில் தன் மகன் சிவசோதியின் குரல் கேட்டு மகிழ்ந்துவாழ்ந்தார்.
கே.சிவசோதி (இளையபாரதி) புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் காலத்தில்அவரது வர்த்தகத் துறை வளர்ச்சிக்கும், தொடர்ந்து கனேடிய தமிழ்ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் உருவாக்கத்துக்கும் செயற்பாடுகளுக்கும் உந்துசக்தியாக விளங்கியவர்.
சோதியின் வானொலிக் கீர்த்தியை கேட்டு மகிழ்ந்தவர்.
கனடாவில் தமது பெற்றெடுத்த செல்வங்களோடு வாழ்ந்து வந்த பொழுதிலும், தாயகத்தில் குறிப்பாக சுன்னாகம் இல்லத்தில் வாழ்வதையே பெரிதும் விரும்பியவர்அங்கேயே உறக்கத்தின் போதே இயற்கை எய்தியுள்ளார்.
அன்னையின் இழப்பு ஆற்றிட முடியாதது. அவரை இழந்து தவிக்கும் உறவுகளின்துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.