தைவான் பயணம் தொடர்பில் நான்சி வெளியிட்ட முக்கிய தகவல்!
அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தம்முடைய தைவான் பயணம் "மதிப்புமிக்கது" என்று தற்காத்துப் பேசியுள்ளார்.
சீன அரசாங்கம் தைவானைத் தனிமைப்படுத்துவதை அனுமதிக்கமுடியாது என்று திருமதி பெலோசி கூறியுள்ளார். அவருடைய பயணத்துக்குப் பிறகு தைவான் நீரிணை வட்டாரத்தில் பதற்றம் இன்னமும் தணியவில்லை.
சீனாவும் தைவானும் ஒன்றுக்கொன்று கடுமையாகச் சாடிக்கொண்ட நிலையில் இருதரப்பிலும் ராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது. பலவந்தமாக ஒன்றிணைப்பதைத் தடுக்கும் தைவானின் முயற்சி தோல்வியடையும் என்று பெய்ச்சிங் எச்சரித்தது.
இந்நிலையில் தைவானை ஊடுருவப் பெரிய அளவில் சீனா ஒத்திகை நடத்துவதுபோல் தெரிவதாகத் தைப்பே தெரிவித்துள்ளது.
தைவானை மீண்டும் இணைப்பதற்கு சீனாவுக்குப் பரந்த நோக்கம் இருப்பதாகத் தைவானிய வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வூ (Joseph Wu) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.