பிரான்ஸிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய தகவல்!
பிரான்ஸ் உட்பட ஐரோப்பா நாடுகளில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மக்கள், கட்டண அதிகரிப்பு குறித்து கவலையடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான அதிகரிப்பு நிலைமை எதிர்வரும் காலங்களில் தொடரும் என்று ரைனர் விமான சேவையின் உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் மிகக் குறைந்த விலைகளான 0.99 யூரோ முதல் 9.99 யூரோ வரையான கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படாது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு எவ்வித அதிகரிப்பையும் ஏற்படாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விலை உயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. எனினும் ரைனர் போன்ற குறைந்த கட்டண விமானங்களை மாத்திரம் இந்த காரணங்கள் பாதிக்கவில்லை.
2021ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில், எயார் பிரான்ஸ் விமான டிக்கெட்டுகளுக்கு, நடுத்தர தூர வணிக விமானத்திற்கு சுமார் 20 யூரோ அதிகமாகவும், நீண்ட தூர விமான பயணத்திற்கு 160 யூரோ அதிகமாகவும் செலவாகும்.
பிரான்ஸில் இருந்து புறப்படும் விமானங்களின் டிக்கட் கட்டணங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியை விட 20.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
2019ஆம் செப்டம்பர் மாததத்துடன் ஒப்பிடும் போது இந்த கட்டணம் 21 சதவீதம் அதிகமாக உள்ளது எனவும் பிரான்ஸ் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் நடுத்தர தூர சேவைகளின் விமான டிக்கட் கட்டணம் 23.6 சதவீதத்திற்கும் அதிகமாக மிகப்பெரிய விலை உயர்வை கண்டுள்ளது. மேலும் பாரிஸ் மற்றும் ஷாங்காய் இடையே இருவழி பாதைக்கான விமான டிக்கட்களின் கட்டணங்கள் மூன்று ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து.
அதன் பெறுமதி 1,800 யூரோவாகும். இது சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் காரணமாக இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. இது பணவீக்கம் மற்றும் எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இந்த அளவிற்கு டிக்கட் விலை அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிகரிப்பு இம்முறை குளிர்கால சுற்றுலா பயணங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.