இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; செக் குடியரசில் சம்பவம்
செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மன் எல்லையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ள மிலாவ்ஸ் கிராமத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 8.00 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தினையடுத்து அண்டை நாடான ஜேர்மனியில் இருந்து ஆம்பியூலன்ஸ் உட்பட மீட்புக் குழுக்கள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்த்தன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஏழு பேரின் நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் வேகமாக வந்த ரயில் மற்றைய ரயிலின் முன்பக்கத்தில் மோதியதா அல்லது பின்புறத்தில் மோதியதா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.