பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; பல நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மனித உடல் பாகங்கள்!
பிரித்தானியாவில் பல நாட்களாக பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள், விசித்திரமாக ஜாடி ஒன்றிற்குள் மனித உடல் பாங்கங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தில், Toxteth பகுதியில் உள்ள Wordsworth தெருவில் பல ஆண்டுகளாக யாரும் குடிவராமல் ஒரு விடு காலியாக இருந்தது. இந்த நிலையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 9-ஆம் திகதி) அன்று, கட்டுமான பணியாளர்கள் அந்த வீட்டை சீர் செய்துகொண்டிருந்த போது, அங்கு ஒரு ஜாடிக்குள் மனித உடல் பாகங்கள் பதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்தபொலிஸார் , வீட்டிற்குள் கிடைத்த மனித எச்சங்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்த வீட்டில் பொலிஸார் தடயவியல் குழுவுடன் இணைந்து ஆய்வு நடத்திவருவதுடன் மோப்ப நாய்களும் உதவிக்கு பயன்படுத்தப்பட்டன.
மேலும் அந்த வீடு அமைந்துள்ள Wordsworth தெரு முழுக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதேவேளை குறித்த வீட்டிற்கு அருகிலேயே டோக்ஸ்டெத் பார்க் கல்லறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.





