பிரான்ஸ் ஜனாதிபதி தாக்கப்பட்ட சம்பவம்; மற்றுமொரு திடுக்கிடும் தகவல்!
பிரான்ஸ் ஜனாதிபதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டவாது சந்தேக நபர் ஆயுதம் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக BFMTV தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனை நபர் ஒருவர் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tain-l'Hermitage நகரில் உள்ள ஹோட்டல் பள்ளிக்கு சென்ற போது நபர் ஒருவர் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தார். இதைனையடுத்து சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்களை பொலிசார் கைது செய்தனர்.
சம்பவத்தை படமாக்கியதற்காக இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், என்ன ஆயுதம் என்ற விவரம் தெரியவில்லை, அதுமட்டுமின்றி, இரண்டாவது சந்தேக நபர் ஹிட்லரின் ‘Mein Kampf’ புத்தகம் வைத்திருந்ததாகவும் BFMTV மேலும் தெரிவித்துள்ளது.