சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அதிகரித்த வர்த்தகம்!
சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வர்த்தகம் 90 பில்லியனில் இருந்து 190 பில்லியனாக உயர்ந்துள்ளதாக சீன அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் போரை நிறுத்த பகுத்தறிவு மற்றும் முடிவு சார்ந்த உரையாடல் மற்றும் ஆலோசனைகளை தொடர சீன அதிபர் சி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் போர் குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள கட்டுரையின் ஆங்கிலப் பதிப்பை சீன அரச பத்திரிக்கையான சின்ஹுவா வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரையில், நெருக்கடியைத் தீர்க்க நியாயமான வழியைக் கண்டுப்பிடிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம் என சீன அதிபர் தெரிவித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன அதிபர் சீ ஜின்பிங் மூன்று நாள் விஜயமாக இன்று மொஸ்கோவிற்கு சென்றுள்ளார். அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டப்பின் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுவாக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது.
அதேநேரம் உக்ரைன் போர் குறித்த ஆலோசனைகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.