தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகும் இந்தியா
ரஷ்யாவின் அழைப்பை ஏற்று தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அக்டோபர் 20ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கவுள்ளது.
இந்தியாவின் பங்கேற்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, அக்டோபர் 20ம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை ரஷ்யா அழைத்துள்ளது. இதில் நாம் பங்கேற்க உள்ளோம்' என்று அறிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளருக்கு நிகரான பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்னும் இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படவில்லை.