கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா; ஒரே நாளில் 3,62,727 பேருக்கு தொற்று; 4,120 பேர் மரணம்
முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றினால் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 பேராக உயர்ந்துள்ளதுடன், கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,52,181 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,120 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை , இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவையெனவும் கூறப்படுகின்றது.