இந்தியா வருவதற்கு இ-விசா கட்டாயம் ...மத்திய அரசு அதிரடி
ஆப்கானில் இருந்து இந்தியா வருவதற்கு இ-பாஸ் முறையாம் கட்டாயமாக்கி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானியர்களும் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பா ,இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
இந்திய விமானப்படை விமானமும் அங்கு சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கானை சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் அதிகமான அளவு இந்தியாவுக்கு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ -விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இந்தியா வர விரும்பும் ஆப்கானிஸ்தானிய மக்கள் இதற்கான இணையதளத்தில் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர்கள் www.indianvisaonline.gov.in ல் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.