காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்பிற்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சனையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என்று இந்திய மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஒபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிய வில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் எந்த சூழலிலும் தாக்குதல் நடத்த இந்திய இராணுவத்துக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி இருந்தார்.
அவரின் அறிவிப்பு, உலக நாடுகள் இடையே விவாதமாக மாறி உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக இந்திய மத்திய அரசு தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுபற்றி இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது,
காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்பது மட்டும் தான் எஞ்சியுள்ளது இதில் இன்னொரு நாடு பேசுவதற்கு என்று வேறு எதுவும் இல்லை.
ஆயுததாரிகளை ஒப்படைப்பது பற்றி அவர்கள் (பாகிஸ்தான்) பேசினால் நாம் பேசலாம். வேறு எதையும் பேசுவதற்கு தயாராக இல்லை.
யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. யாரும் மத்தியஸ்தம் செய்ய எங்களுக்குத் தேவையும் இல்லை. இவ்வாறு இந்திய மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.