சீன மக்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்திய இந்தியா..ஏன் தெரியுமா?
இந்திய மாணவர்களுக்கு சீனப் பல்கலைக்கழகங்கலில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு அனுமதி வளங்கத்தை தொடர்ந்து சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
2020 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா பரவலை தொடர்ந்து அந்நாட்டில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். இந்த நிலையில் தற்போது மீண்டும் சீனா செல்ல முற்பட்ட இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இதனால் சுமார் 22,000 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது,இதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமரச முடிவெடுக்குமாறு சீன அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்த முடிவை அறிவிப்பதில் சீனா தாமதம் காட்டி வருகிறது.
இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது.