விமான நிலையத்தில் 3 மாதங்கள் மறைந்து வாழ்ந்த இந்தியா் !அமெரிக்க நீதிமன்றம் விடுவிப்பு
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் யாருக்கும் தெரியாமல் 3
மாதங்களாக மறைந்து வாழ்ந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சோ்ந்த ஆதித்யா சிங் (37 வயது) என்ற அவர் மேற்படிப்புக்காக இந்தியாவிலிருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற அவா் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் தனது முதுநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளாா்.
அதன் பிறகு, கலிஃபோா்னியா ஆரஞ்ச் நகருக்கு சென்ற அவா், அங்கு ஒருவரின் வீட்டில் தங்கி அவருடைய பெற்றோரை கவனித்துக்கொள்ளும் பணியை செய்துவந்துள்ளாா்.
பின்னா், தனது விசா காலம் நிறைவடைய உள்ளதை முன்னிட்டு, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார். அதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து விமானம் மூலம் சிகாகோ வந்துள்ளாா்.
இந்நிலையில் அவர் சிகாகோ ஓஹோ் சா்வதேச விமான நிலையம் வந்த அவா், இந்தியா சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தால் இந்தியாவுக்கு புறப்படும் விமானத்தில் ஏறுவதைத் தவிா்த்துள்ளார்.
விமான நிலையத்தில் யாரும் கண்டுபிடிக்காத வகையிலும், அங்குள்ள கடைகள், உணவகம் மற்றும் பொதுக் கழிவறைக்கு எளிதில் சொன்றுவரக் கூடிய வகையிலுமான மறைவிடத்தில் தங்கியுள்ளாா்.
இதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரியில், யுனைட்டட் விமான ஊழியா்கள் இருவா் ஆதித்யா சிங்கிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது, கடந்த 2020 அக்டோபரில் காணாமல் போன விமான நிலைய மேலாளரின் அடையாள அட்டையை ஆதித்யா சிங் காண்பித்துள்ளாா்.
அப்போதுதான், அவா் விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக அத்துமீறி தங்கியிருப்பது அவா்களுக்குத் தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து அவா் ஜனவரி 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து விமானநிலைய போக்குவரத்து பாதுகாப்பு நிா்வாகம் தீவிர விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், விமான நிலைய விதிமுறைகளை ஆதித்யா சிங் மீறவில்லை என்பது தெரியவந்தது.
இந்த வழக்கு உள்ளூா் குக் கௌன்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆதித்யா சிங் சாா்பில் ஆஜரான வழக்கரிஞ்சர் “அவரை விடுவிக்க வேண்டும்” என்று வாதிட்டாா்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி ஆட்ரினி டேவில், விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டிலிருந்து ஆத்தியா சிங்கை விடுவித்து உத்தரவிட்டாா்.
அதே நேரம், விமான நிலைய மின்னணு கண்காணிப்பில் சிக்காமல் தப்பித்த மற்றொரு வழக்கு அவா் மீது நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாகவும் ‘தி சிகாகோ டிரிபியூன்’ என்ற பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ‘தி டொ்மினல்’ ஆங்கில திரைப்படத்துடன் ஒப்பிட்டு பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக்கின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.