அபுதாபி இளவரசரால் கௌரவிக்கப்பட்ட இந்திய தொழிலதிபர்
அபுதாபியின் மிக உயரிய குடிமக்கள் விருது இந்திய தொடில் அதிபர் உள்ளிட்ட 11 பேருக்கு அந்நாட்டின் இளவரசர் வழங்கி கௌரவித்தார்.
அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணை தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி மற்றும் 11 நபர்களுக்கு அபுதாபியின் சமூகத்திற்கு அளித்த உன்னத மற்றும் தொண்டு பங்களிப்புக்காக அபுதாபியின் மிக உயரிய குடிமக்கள் விருது வழங்கி கௌரவித்தார்.
பல நாடுகளில் ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை நிறுவனங்களை இயக்கும் அபுதாபியை தளமாகக் கொண்ட லூலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான இந்திய வம்சாவளி தொழிலதிபர் யூசுப் அலி நேற்று அபுதாபியின் பட்டத்து இளவரசரால் கௌரவிக்கப்பட்டார்.