இலங்கைக்குள் நுழைந்தார் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை பூங்கொத்து கொடுத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.