அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவர் ; விசாரணை தீவிரம்
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மெல்லடுப்பலப் பள்ளி கிராமத்தை சேர்ந்த பவன் குமார் ரெட்டி என்ற மாணவர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார்.
அங்கு தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார். அவர் பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.

இந்நிலையில், பவன் குமார் ரெட்டி நண்பர்களுடன் இரவு உணவின் போது உடல்நிலை சரியில்லாமல் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தார்.
அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சையின் போது காலமானார்.
இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது திடீர் மரணச் செய்தி குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவுக்கு, பவன் குமார் ரெட்டியின் உடலை கொண்டு வரும்படி அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.