ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய அணி! தலைவர்கள் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஓய் ஹாக்கி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், சிம்ரஞ்சீத் சிங் இந்தியாவுக்காக இரண்டு கோல்களை அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் ரூபிந்தர் பால் சிங் ஆகியோரும் தமது பங்கிற்கு கோல்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வெற்றி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 வருட பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர உதவியது. இதேவேளை ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஆக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும்.
மேலும் இந்திய தேசிய விளையாட்டான ஆக்கியில் 1980 ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்