அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் விடுதலை
அமெரிக்கா, கனடா எல்லை பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்ட ஏழு இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்க-கனடா எல்லையில் 15 பேரை வேனில் ஏற்றியதாக அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் ஸ்டீவ் சந்த் (46) என்பவர் கைது செய்யப்பட்டார் . வேனில் பயணம் மேற்கொண்டவர்களில் 2 பேர் இந்தியர்கள். அவர்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதே எல்லையில் நடந்து சென்ற மேலும் ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட இந்தியர்கள் கூறுகையில், “நாங்கள் கனடாவில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது எங்களில் சிலர் கடத்தப்பட்டோம். சுமார் 11 மணி நேரம் எங்களை அழைத்து சென்றனர். மேலும் வீட்டில் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், மருந்து, பொம்மைகளை வாங்கிச் சென்றனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஏழு இந்தியர்களையும் விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்