இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் ஓமனுக்கு வரலாம்!
கோவேக்சின் (Covaxin) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் ஓமனுக்கு பயணம் செய்யலாம் என்று இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பது,
ஓமன் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எந்தெந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஓமன் நாட்டுக்கு வரலாம் என்ற தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கோவேக்சின் (Covaxin) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஓமன் நாட்டுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவேக்சின் (Covaxin) தடுப்பூசியை போட்டிருப்பவர்கள் ஓமன் நாட்டுக்கு வரும் போது தனிமைப்படுத்துதல் விதிமுறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொள்ளலாம். எனவே இந்தியாவில் கோவேக்சின் (Covaxin) தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் ஓமன் வரலாம். 2-வது டோஸ் போட்டுக் கொண்ட 14 நாட்களில் தங்களது பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.