பி.சி.யில் ஆபத்தான போதை மருந்து மரணங்கள் அதிகமும் இந்த மக்களில் தான்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஆண்டில் மட்டும் போதைமருந்து மரணங்களில் இலக்கானவர்கள் கிட்டத்தட்ட 15% பூர்வகுடி மக்கள் என தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஆண்டு மட்டும் 254 பூர்வகுடி மக்கள் போதை மருந்துக்கு பலியாகியுள்ளனர். இது 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 120% அதிகரித்துள்ளதாக முதன்மை மருத்துவத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த பின்னரே பூர்வகுடிகளில் போதை மருந்து இறப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இருந்து பூர்வகுடி மக்களை காப்பாற்றும் பொருட்டு, சுகாதார அமைப்புகள் புதிய திட்டங்களுடன் களமிறங்கியுள்ளதாகவும், சிகிச்சை மற்றும் அதனால் ஏற்படும் காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளும் உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் கடந்த ஆண்டு போதை மருந்து காரணமாக 1,716 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில் வெறும் 3.3% மட்டுமே கொண்ட பூர்வகுடிகளில் போதை மருந்துக்கு கடந்த ஆண்டில் 254 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.