ஜெர்மன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.!
ஜெர்மன் வழியாக பயணிப்பவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெர்மனியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது வெளிநாட்டிற்கு பயணம் செல்பவர்கள் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையம் வந்து அதன் பிறகு மற்றொரு விமானத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு ஜெர்மனிக்கு வராமல் விமான நிலையத்திற்கு மட்டும் வந்து அங்கிருந்து வேறு நாட்டிற்கு விமானம் மூலம் ஏறி செல்பவர்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜெர்மன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தையோ, கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தையோ காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று கூறப்படுகிறது.