வெப்பத்தினால் அவதியுறும் ரொறன்ரோ குடியிருப்பாளர்கள்
கடுமையான வெப்பம் காரணமாக ரொறன்ரோ குடியிருப்பு தொகுதியொன்றின் குடியிருப்பாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த குடியிருப்பாளர்கள் காற்று சீராக்கிகள் இன்றி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
வீடுகளுக்குள் உள்ளே மக்கள் கடுமையான வெப்பநிலையை உணர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகால வெப்பநிலையினால் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
42 மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் காற்றுச் சீராக்கியின்றி குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்று சீராக்கிகளில் கோளாறு ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் அவை பழுதுபார்க்கப்படவில்லை என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.