கனடா உட்பட 25 நாடுகளில்... சிறார்களுக்கான அம்பர் எச்சரிக்கை
மாயமாகும் சிறார்களுக்காக அம்பர் எச்சரிக்கை வசதியானது அறிமுகம் செய்ய இன்ஸ்டாகிராம் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வசதியானது கனடா உட்பட 25 நாடுகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஜூன் 1ம் திகதி அறிவிப்பை வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் நிற்வாகம், புகைப்படங்களுகாக மட்டுமே பிரபலமடைந்துள்ள இன்ஸ்டாகிராம், அம்பர் எச்சரிக்கை திட்டத்திற்கு மிகவும் பொருத்தமான தளம் என குறிப்பிட்டுள்ளது.
மாயமாகும் சிறார்களின் புகைப்படங்கள் தான் அவர்களை கண்டுபிடிக்க முதன்மை கருவியாக பயன்படுகிறது. இன்ஸ்டாகிராமில் குறித்த புகைப்படங்களை பதிவிடுவதால், பல மில்லியன் மக்களை சென்றடையும் எனவும், அதன் தாக்கம் மிக அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பேஸ்புக் பக்கத்தில் 2015ல் இருந்தே அம்பர் எச்சரிக்கை வசதி அறிமுகம் செயப்பட்டுள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யவிருக்கும் அம்பர் எச்சரிக்கை வசதியானது கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, உக்ரைன் உள்ளிட்ட 25 நாடுகளில் அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றே தெரிய வந்துள்ளது.