கொரோனா பாதித்த 54 பேருக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை!
ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் தினமும் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சலாலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 111 ஆக இருந்து வருகிறது. இதில் 54 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு செயற்கை முறையில் சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவர்களும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை அளித்து வருகிறது. ஏற்கனவே அரசு சார்பில், ஓமன் நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஊரடங்கின் நேரத்தை நீட்டிக்க பரிந்துரை செய்யப்படும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் நேரத்தில் நோன்பு திறப்பதற்காக மற்றவர்களது வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.