இஸ்ரேல்–ஹிஸ்புல்லா மோதலுக்கு இடைக்கால முடிவு ; போர் நிறுத்தம் அமுல்
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே இன்று (19) முதல் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் கட்டார் தரப்பு பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் உதவியுடன் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாற்றங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் போர் நிறுத்த உடன்பாட்டில் ஈடுபட்டுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.