தவறான ப்ரீஸரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி... அதிகாரிகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கனேடிய நகரமொன்றில் கொரோனா தடுப்பு மருந்து தவறான ப்ரீஸரில் சேமித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, தடுப்பூசி பெற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கானோர் மீண்டும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Revelstoke நகரில், கொரோனா தடுப்பு மருந்து தவறான ப்ரீஸரில் சேமித்துவைக்கப்பட்டிருந்ததால், அது செயல்படாமல் போயிருக்கலாம் என நம்பப்படுகிறது
பாதிக்கப்பட்ட அந்த தடுப்பு மருந்தை பயன்படுத்தி அப்பகுதியிலுள்ள 15 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 501 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, அந்நகரத்தில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் வந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.