புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தர்வு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
உக்ரைனில் போர் விதிகளை மீறி ரஷ்யா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது.
இந்த கொடூர தாக்குதல் தொடர்பில் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய முறைப்பாடுகள் எழுந்தன.
இந்த முறைப்பாடு தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் புடின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.