கனடா பயணம் தொடர்பில் சர்வதேச பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
செப்டம்பர் 7 முதல், முழுமையாக தடுப்பூசி பெற்ற சர்வதேச பயணிகளுக்கு தனது எல்லைகளை திறந்துவிட கனடா திட்டமிட்டுள்ளது.
அத்துடன், நாட்டுக்குள் வரும் தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தலும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் தொடங்கிய கனடா, முதலில் முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்களை நாட்டுக்குள் அனுமதித்ததுடன், தனிமைப்படுத்துதலையும் விலக்கிக்கொண்டது.
தற்போது அனைத்து நாடுகளின் பயணிகளும், முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கும் பட்சத்தில், கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கனடா கொரோனாவின் நான்காவது அலைக்குள் நுழைகிறது. ஜூலை இறுதியிலிருந்தே கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது. குறிப்பாக தடுப்பூசி பெறாதவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் எல்லைகளை திறப்பதாக கனடா அறிவித்துள்ளதால், பலரும் இது சாத்தியமா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஆனால், கொரோனா நிலைமை மிக மோசமடைந்தாலன்றி, திட்டமிட்டபடி செப்டம்பர் 7ஆம் திகதி எல்லைகள் திறக்கப்படும், முழுமையாக தடுப்பூசி பெற்ற சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
All travellers entering Canada must submit their #COVID19 info, including your vaccination status and test results within 72 hours before your arrival through #ArriveCan. Learn more about travelling during COVID-19: https://t.co/UWAbUqHWDX pic.twitter.com/HqZ0aX8KNU
— Transport Canada (@Transport_gc) September 2, 2021