ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்: பொதுமக்கள் உதவி கோரும் பொலிஸ்
ஆல்பர்ட்டாவில் ஆற்றில் சடலமாக ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் கொலையா தற்கொலையா என பொலிசார் விசாரணை துவங்கியுள்ளனர்.
Cochrane பகுதியில் உள்ள ஆற்றில் இருந்தே 36 வயதான அந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிச்சார், படகு மூலம் தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்ததுடன், உடனடியாக சடலத்தை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டதுடன், அந்த நபர் Cochrane பகுதியில் வசிப்பவர் என்றே தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் உரிய விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நபர் தொடர்பில் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.