டிரம்பை ஏமாற்றிய கில்லாடி ஈரான்; இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்து யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு இடம்மாற்றியிருக்கிறது என இஸ்ரேலிய அதிகாரிகளும் கூறுகிறார்கள்
அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் 3 ஆணு சக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தாக்குதல் மேற்கொண்டன. தாக்குதலால் அந்த மையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
தாக்குதல் வெற்றி என்றும், போர் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டது.
அதேவேளை அணுசக்தி மையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்திருந்து, யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்து யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு இடம்மாற்றியிருக்கிறது என இஸ்ரேலிய அதிகாரிகளும் கூறுகிறார்கள்.
400 கிலோ கிராம் எடையுள்ள யுரேனியத்தையும், அதில் 60 சதவீதம் செரிவூட்டப்பட்ட யுரேனியமும் இருந்துள்ளது. மேலும் 90 சதவீத தளவாளங்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஈரானுக்கு, அமெரிக்கப் படைகளை அனுப்புவது குறித்து முடிவெடுக்க நேரம் கேட்டிருந்தபோதே, ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால், அணுக் கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று உலகமே அஞ்சி இருந்தது. இந்த நிலையில், அதுபோன்ற எந்த அபாயத்துக்குரிய பொருள்களும் அங்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலில் முதல் இலக்காக ஃபார்டவ் இருந்துள்ளது. இங்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் என்று நம்பப்படுவதே அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது