ஈரான் அதிபர் தேர்தல்: 7 வேட்பாளர்கள் தேர்வு
ஜூன் 18-ஆம் திகதி நடைபெறும் ஈரான் அதிபா் தோ்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவா் இப்ராஹிம் ரய்லி உள்பட ஏழு போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தற்போதைய அதிபா் ஹசன் ரெளஹானிக்கு நெருக்கமானவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இப்ராஹிம் ரய்லி உள்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகா் சயீத் ஜலீல், முன்னாள் கமாண்டா் மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அலி ரசா ஜகானி, தற்போதைய உறுப்பினா் அமீா் ஹுசைன் காஜிஸ்தி, முன்னாள் மாகாண ஆளுநா் மோசின் மெஹராலிசேத், மத்திய வங்கியின் தலைவா் அப்துல்நசீா் ஹிம்மதி ஆகியோரும் அதிபா் பதவிக்கு போட்டியிடுகின்றனா் என்று அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
1998-ஆம் ஆண்டு ஏராளமானோருக்கு மரண தண்டனை விதித்த சட்டத் துறைத் தலைவா் இப்ராஹிம் ரய்லிக்கு இந்தத் தோ்தலில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஈரானின் மூத்த தலைவா் அயதுல்லா அலி காமேனியின் ஆதரவையும் இப்ராஹிம் ரய்லி பெற்றுள்ளாா்.
தற்போதைய அதிபா் ஹசன் ரெளஹானியுடன் அண்மையில் இணைந்த அந்நாட்டு நாடாளுமன்ற முன்னாள் தலைவா் அலி லாரிஜானிக்கு அதிபா் தோ்தலில் போட்டியிட ஈரான் காா்டியன் கவுன்சில் வாய்ப்பு அளிக்க மறுத்துள்ளது.
அதிபா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 590 போ் பதிவு செய்திருந்ததாகவும், அதில் 7 போ் மட்டும் தோ்வு செய்யப்பட்டதாகவும் ஈரானின் காா்டியன் கவுன்சில் செய்தித் தொடா்பாளா் அப்பாஸ் அலி தெரிவித்தாா்.
கடந்த 2017-இல் நடைபெற்ற தோ்தலில் 1,630 போ் போட்டியிட பதிவு செய்திருந்தனா்.