அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாத ஈரான்!
ஈரானின் உயிர் நாடியான ஹோர்முஸ் நீரிணையில் முற்றுகையை தொடங்கிய அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது நிலைப்பாட்டை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை தெஹ்ரானைச் சேர்ந்த ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி குறிப்பிட்டுள்ளார். தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள போரின் பின்னணியில், இந்த நெறிமுறைகளைத் தங்களால் செயல்படுத்த முடியும் என்று ஈரான் நம்புவதாக அவர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா புதிய முற்றுகையை தொடங்கி ஈரானின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்க விரும்புகிறது.
ஆனால், ஈரான் தமது கொள்கையை மாற்றிக்கொள்ளப் போகிறது என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் அல்லது சமிக்ஞையும் ஈரானிய தரப்பிலிருந்து இதுவரை தென்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.