அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை; மறுக்கும் ஈரான் உயர் தேசியப் பாதுகாப்புச் சபை
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர் தேசியப் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவரது அறிக்கையை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

அதேவேளை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.