ஹோர்முஸ் நீரிணை திறக்காது ; ஈரான் கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை தமது தேசத்தின் எதிரிகளுக்காக ஒருபோது திறந்துவிடப்படாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அதற்கு பதிலளிக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, நிலைமை உறுதியாகவும் ஆதிக்கத்துடனும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய கேலிக்குரிய செயல்களால் இந்தத் தேசத்தின் எதிரிகளுக்கு அது ஒருபோதும் திறந்துவிடப்படாது.
ஈரானிய தலைவர் போர்நிறுத்தம் கோரியுள்ளதாகச் சற்று முன்னர் டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்திருந்தார்.